திங்கள், 27 ஜூலை, 2015

டயர் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் .



டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!

வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது. 
பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது.

எனவே,
வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே 
சாலச் சிறந்தது.

ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் 
குறியீடு மூலம் கொடுக்கப்
பட்டிருக்கும்.

எனவே,டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.

டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்
பட்டிருக்கும் 
குறியீடுகளும் 
அதன் விபரங்களையும்
காணலாம்.

உதாரணமாக, ( 35PSI ) MAX PRESS 
என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்
பட்டிருக்கும் .

குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும்.

அதற்குமேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது.

அடுத்ததாக, 
215/65R14 89H M+S 
என்று கொடுக்கப்
பட்டிருந்தால், அதில், 
215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது.

அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும்.

R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும்.

இதுதவிர, சாதாரண டயர்கள் A மற்றும் B ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும்.

14 என்ற எண்கள் டயரின் உள்விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது.

அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர்அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது.

அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.

உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.

(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் 
விபரம் கீழே கொடுக்கப்
பட்டிருக்கிறது.

மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால்,சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், 
அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம்.

இதே போன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.

டயரில் ஆங்கிலத்தில் 
DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும்முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும்.

அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும்,

இதில் G H Y T என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின்
குறியீடு,

அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு.

எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.

டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்:

P-150 Kmph

Q-160 Kmph

R-170 Kmph

S-180 Kmph

T - 190 Kmph

H - 210 Kmph

V - 240 Kmph

W - 270 Kmph

Y - 300 Kmph

ZR - over 240 Kmph

( பின் குறிப்பு)

டயரில் காற்று இருகின்றதா என்று பார்க்கவும்,,,,

Subject:

டயர்கள் பற்றிய தவறான எண்ணங்களும், அதன் உண்மைகளும்...!!

வாகனங்களின் மைலேஜ், நிலைத்தன்மை போன்றவற்றை அளிப்பதில் டயர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால், டயர்களை பராமரிப்பதில் வாகன உரிமையாளர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

இந்த நிலையில், டயர்களை பராமரிப்பதிலும், பாதுகாப்பு சோதனைகள் பற்றியும் பலர் தவறான சில எண்ணங்களை வைத்துள்ளனர்.

காலங்காலமாக இதனை நம்பியும் சில தவறுகளை செய்கின்றனர்.

அந்த தவறான எண்ணங்களையும், அதன் உண்மையான பயன்பாடு மற்றும் காரணத்தையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

முதலில் தவறான எண்ணத்தையும், அதன் உண்மை அல்லது தீர்வை தொடர்ந்து கொடுத்துள்ளோம். இது நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

காற்றின் அழுத்தம்

டயர்களின் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ எனப்படும் டயர்களுக்கான காற்றின் அளவையே சிலர் சரியானதாக கருதுகின்றனர். ஆனால், அது சரியானதா?

சரி எது?

டயர்களின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ அளவு டயரின் அதிகப்பட்ச காற்றின் அழுத்த்தை தாங்கும் திறனையே குறிக்கிறது.

எனவே, உங்களது வாகனத்துககான பரிந்துரைக்கப்பட்ட அளவை தெரிந்து கொள்ள காரின் கதவின் உட்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவை பின்பற்றி காற்று நிரப்புங்கள்.

வால்வு மூடி

ட்யூபிலிருந்து காற்று வெளியேறுவதை வால்வு மூடி தடுக்கும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.

சரி எது?

ஆனால், வால்வு மூடி காற்று வெளியேறுவதை தடுக்காது. தூசி, தண்ணீர், சேறு உள்ளிட்டவை வால்வுக்குள் புகாதவாறு தடுப்பதற்காகவே மூடி கொடுக்கப்படுகிறது.

அதிக கிரிப்புக்கு...

சிலர் டயரில் காற்றழுத்தம் குறைவாக இருந்தால் அதிக கிரிப் கிடைக்கும் என்று கருதுகின்றனர்.

சரி எது?

காற்றழுத்தம்
தான் காரணம்

ஞாயிறு, 26 ஜூலை, 2015

தங்கம் , வெள்ளி , பட்டு பராமரிப்பது எப்படி ???

'

எப்படா இந்த நகை விலை குறையும் என 
பலரும் கவலைப்பட்ட நாட்கள் மாறி, கடந்த 
சில நாட்களாக 'ஜாக்பாட்' போல நகைகளை 
எடுக்கும் வாய்ப்பாக தங்கம் மார்க்கெட் 
விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வரு
கிறது வாங்கிட்டா மட்டும்போதுமா, அதை 
எப்படி பராமரிக்கிறது? என்ற கேள்வி 
பலருக்கும் இருக்கும்.


அப்படி 

கேட்பவர்களுக்கான பதிலையும் கூடவே, 
காஸ்ட்லி புடவையான பட்டுப்புடவையை 
பராமரிக்கும் முறைப்பற்றியும் இங்கே 
சொல்லியிருக்கிறோம்.

படிச்சுக்

கோங்க.. தெளிஞ்சுக்கோங்க..!


கற்கள்

பதித்த நகைகள்:

*********************************
* பலருக்கும் மிகப்பெரிய கவலை அடிக்கடி 
வெள்ளிக் கொலுசுகளின் பளபளப்பு மங்கி, 
கறுத்துவிடுவதுதான். நல்ல பளிச் லுக்கிற்கு, 
கொலுசில் சிறிதளவு பற்பசையை தேய்த்து, 
கொஞ்ச நேரம் ஊறியபின், பிரஷ்ஷால் தேய்த்து 
கழுவினால் பளபளவென்று ஆகி விடும்.
* பொதுவாகவே எல்லோருக்கும் 
தெரிந்ததுதான். 
பலரும் நகை வாங்கும்போது பெரும்பாலும் 
கற்கள் பதித்த நகைகளை வாங்குவதில்லை. 
அதை தொடர்ந்து தினமும் அணிந்தால், ஒளி 
மங்கிவிடும். இதற்கான தீர்வு, நீலக்கலர் 
பற்பசையை கற்கள் மீது பூசி, மென் 
தன்மையுடைய பிரஷ் அல்லது பனியன் 
துணியால் மெதுவாக தேய்க்க வேண்டும். அதன் 
பிறகு, சுத்தமான தண்ணீரில் கழுவி, நீராவியில் 
காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய், 

பிசுக்கு போன்றவை நீங்கி புத்தம் புது நகையாக 
ஜொளிக்கும்.

வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகளை 
பராமரித்தல்:
*********************************************************************
***
* வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் 
வைக்காமல், மரப் பெட்டி அல்லது நகைப் 
பெட்டியில் வைத்தால், எப்பொழுதும் 
பளபளப்பாக இருக்கும்.
* மிதமாக சுட வைத்த தண்ணீரில், சிறிதளவு 
டிடர்ஜென்ட் தூள் கலந்து அதில், வெள்ளி 
நகைகளை ஊற வைத்து சுத்தம் செய்தால், 
நகைகள் பளபளக்கும்.
* அரை டம்ளர் தண்­ணீரில் ஷாம்பூ போட்டுக் 
குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் 
வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, 
சுத்தமான தண்­ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் 
போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்.
* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது 
கற்பூரத்தைப் 
போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் 
கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.
* புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, 
வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் 
ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை 
புதியவை போல் காட்சியளிக்கும்.

முத்து நகைகள்
************************
* முத்து பதித்த நகைகளை தனியாக ஒரு 
பெட்டியில், வெள்ளை நிற காட்டன் துணியில், 
முடிந்து வைப்பது நல்லது.
* முத்து பதித்த நகைகளை நீரில் அமிழ்த்தி 
கழுவக் கூடாது. அப்படி கழுவினால் முத்துக்கள் 
ஒளி இழந்துவிடும். மேலும், இந்நகைகள் மீது 
வாசனை திரவியங்கள் பட்டால், முத்துக்களின் 
பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, 
ஒப்பனைகள் முடிந்த பின், முத்து நகைகளை 
அணிவதே சிறந்தது.

தங்க நகைகள்
*********************
* தங்க நகைகளை அதற்கென இருக்கும் 
பெட்டியில் வைக்க வேண்டும். அப்போதுதான், 
அதில் பதிக்கப்பட்டிருக்கும் கல், முத்து 
விழாமல் 
இருக்கும். தங்க நகைகளுடன், கவரிங் 
நகைகளை சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு 
அணிந்தால், தங்க நகை சீக்கிரம் தேய்ந்து 
விடும்.
* பூந்திக் கொட்டையை ஊற வைத்த தண்ணீரில், 
தங்க நகைகளை கழுவினால், அழுக்கு நீங்கி, 
பளபளப்பாக இருக்கும்.

பட்டுப்புடவைக்கான பராமரிப்பு:
*********************************************
புடவைதான் எந்த ஒரு பெண்ணுக்கும் அழகைத் 
தரக்கூடியது. அந்த விஷயத்தில் பட்டுப்புடவை 
இன்னும் அழகுக்கு அழகூட்டும்.. அதை 
பராமரித்தலில்தான் அத்தனை சிரமம் இருக்கும். 
அதைப்பற்றித்தான் தற்போது 
பார்க்கப்போகிறோம்.
* விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் 
சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். 
விசேஷங்களுக்குச் சென்று வந்தவுடன், பட்டுச் 
சேலையை களைந்து உடனே மடித்து வைக்கக் 
கூடாது. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர 
விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் 
தேய்த்து மடித்து வைக்கவும்.
* எக்காரணம் கொண்டும் பட்டுச் சேலையை 
சூரிய ஒளியில் வைக்கக் கூடாது, சோப்போ 
அல்லது சோப் பவுடரோ உபயோகித்து 
துவைக்கக் கூடாது. டிரைவாஷ் தான் சிறந்தது.
* ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீ­ர் 
விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக 
இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியைத் 
தடவி 5 அல்லது 10 நிமிடங்கள் வைத்திருந்து 
பின்பு தண்ணீ­ர் விட்டு அலசினால் எண்ணெய் 
கறை போயே போச்சு.
* பட்டுப்புடவைகளை வருடக் கணக்கில் தண்­
ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 
மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டி 
முடித்துவிட்டு, டிரைவாஷ் செய்து பிறகு 
வைக்கவும்.
* அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி 
அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் 
செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக் 
கூடாது. இல்லையெனில் ஜரிகை பாழாகிவிடும்.
* பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி 
வந்தபடி அட்டைப் பையில் அப்படியே 
வைத்திருப்பதை தவிர்த்து, துணிப் பையில் 
வைக்கலாம்.

கண் தானம் செய்வது எப்படி?

கண் தானம் செய்வது எப்படி?

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட 

வேண்டும்.
2. மின்விசிறியை இயக்கக்கூடாது.
3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை 

கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.
4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு 
உடனடியாக 

தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் 
வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க 
வேண்டும்.
5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் 
இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் 
கண்தானம் செய்ய முடியும்.



யார் கண்தானம் செய்ய முடியாது?

நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், 

எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், 

மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் 

இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக 

பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள் :

1. ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்துக்குள் 

கண்தானம் செய்ய வேண்டும்.

2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் 

விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.

3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை 

வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ 

வந்து 

பெற்றுக்கொள்ளும்.

4. கண்தானம் செய்ய 20-30 நிமிடங்கள் போதும். 

இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.

5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் 

சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் 

தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.

6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை 

செய்தவர்கள், 

குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி 

அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.

7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் 

ஒளியை தரும்.

முதன்மையான விசயங்கள் in Tamilnadu






ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் 


தமிழகத்தில் உண்டு, தெரிந்து கொள்ளுங்கள்.


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த

 ூர் ஆண்டாள் கோபுரம்


2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி


3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்


...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – 

கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்

பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் 

கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் 

கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் 

(மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் 

கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் 

கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் 

கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் 

வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m 

(8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா 

கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – 

சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – 

சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி – 

உதகமண்டலம்


22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் 

உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – 

கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 

அடி)

சனி, 25 ஜூலை, 2015

DRIVER களுக்கு தெரியாத உண்மை...!


ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம.. தெரியாத 
உண்மை...!

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே 
வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது 
குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள 
எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. 
அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி 
நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற 
வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட 
வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை 
நிறுத்தி இருக்கும்போது, அனைத்து 
விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட 
இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், 
ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் 
செல்லலாம் என்று பொருள். அதேசமயம் 
தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக 
போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் 
கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் 
சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் 
இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க 
முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது 
என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த 
அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது 
நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற 
முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது 
முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, 
அது 
ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் 
பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை 
வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க 
வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு 
வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு 
முன்பே 
"டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் 
விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் 
பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். 
அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு 
விசைகளின் 
அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது 
மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக 
அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் 
வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து 
திரும்புகின்றனர். இதனால் வாகனம் 
கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் 
வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் 
அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் 
நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக 
மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் 
அரளி 
செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே 
வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் 
இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் 
தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி 
வராது. இது வாகனங்களின் கார்பன் டை 
ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. 
விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது 
தெரியும். 
மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. 
மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், 
மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், 
ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த 
எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.


புதன், 22 ஜூலை, 2015

தமிழ் மூலம் அரபி language கற்கலாம்

தமிழ் மூலம் அரபி கற்கலாம் 
அரபு நாட்டில் அரபி தெரியாமல் கஷ்டப்படும் 
என் தமிழ் சொந்தங்களுக்காக
தாள் ஹின - இங்கே வா
ஹினாக் ரோ -அங்கே போ

எம்சீ - நட
தய்யுப் - நல்லது
ஹைர் - குட்
துக் - அடி
எம்சீக் - புடி
ராத்திப் - சம்பளம்
கற்பான் - ரிப்பேர்
குவைஸ் - நலம்
சர்ராப்f - எ டி எம்
புளூஸ் - பணம்
அபு - வாப்பா
உம்மி - உம்மா
அக்கு - சகோதரன்
கரீப் - பக்கம் நெருக்கம்
பஈத் - தூரம்
மோயா - தண்ணீர்
சுக்ரன் - நன்றி
சுக்ரில்லாஹ் - இறைவனுக்கு
நன்றி
கபீர் - பெரிய
ஹாரிஸ் - வாச்மேன்
சவ்வாக் - டிரைவர்
கத்தாமா - வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்
முதீர் - மேனேஜர்
கபீல் - முதலாளி
அம்மாள் - தொழிலாளி
அக்கிள் - உணவு
சயாரா - கார்
திஜாஜ் - கோழி கரி
மஜ்நுண் - பைத்தியம்
சுதா - தலை வழி
களம் - பேனா
சிகப்பு - அக்gமர்
கருப்பு - அஸ்வத்
வெள்ளை - அபியத்
மஞ்சள் - அஸ்பர்
ஹார் - ஹீட்
துக்கான் - புகை
nadhdhaara - கண்ணாடி முக spex
gaan - பசி
fathoora - பில்
faththoor - காலை உணவு
சனப் - மீசை
உசூன் - காது
எத் - கை
ஐந்ன் - கண்ணு
அஷ்னான் - பல்லு
ஜிதார்- சுவர் , மதில்
பட் ஹா - மணல்
ராமல் - மணல்
துராப் - புழுதி , தூசி, தூசு
ஆமல் - தொழிலாளி
மோயா - தண்ணீர்
ஒயிட் - தண்ணீ லாரி
சவ்வாக் - டிரைவர்
முஹன்தீஸ் - இஞ்ஜினியர்
சப்பாக் முஹன்தீஸ் - மெக்கானிக்கல் 
இஞ்சினியர்
காரபா - எலக்ற்றிகள்
காரபாய் - எலக்ட்ரீசியன்
முராக்கப் - foreமேன்
மசூரா - பைப்
இஜ்தீமா - மீட்டிங்
சில்க் - வயர்
முஸ்மார் - ஆணி
வரக்கா - பேப்பர்
களம் - பேனா
தர்தீப் - ஒழுங்கு படுத்துதல்
யவ்முல் ஜும்மா - வெள்ளி கிழமை
எல்லா சவா சவா ரோ மஸ்ஜித் - மஸ்ஜிதிற்கு 
சேர்ந்து போவோம்
எல்லா சூரா சூரா - சீக்கிரம் கிளம்புங்க
அக்கிள் கலாஸ் - சாப்டாச்சா
லா - இல்லை
லிஸ்ஸ maafi - இன்னும் இல்லை
maafi - இல்லை
எல்லா ரோ
பாக்காலா - கடைக்கு போவோமா
பாக்காலா - கடை
சூக் - மார்கெட்
அல் எவ்ம் அன மா ஈஜி - இன்று நான் வர வில்லை
அல் எவ்ம் அன தாபான் - இன்று எனக்கு உடம்பு சரி இல்லை
தாபான் - உடல் நிலை சரி இல்லை
எல்லா ரோ முச்தஷ்பா - ஹாஸ்பிடல் போ
முஷ்தஷன்பா - ஹாஸ்பிடல்
ஜீப் இக்காமா - உன் இக்காமா கொடு
அந்த்த fபெய்ன் சுகுள் - நீ எங்கு வேலை செய்கிறாய்
கம் ராத்திப் - எவ்வளவு சம்பளம்
கம் - எவ்வளவு
ராத்திப் - சம்பளம்
அன ரோ பார்ரா - நான் வெளியே செல்கிறேன்
அன மவ்ஜூத் பேத் - நான் வீட்டில் இருக்கிறேன்
அன எபுக்க ராத்திப் சியாதா - எனக்கு சம்பளம் அதிகம் வேண்டும்
சியாதா - அதிகம்
சிரிப்பு - இத் ஹாக்
அழுகை - இப்கி
லேஸ் அந்த்த இப்கி - நீ ஏன் அழுகிறாய்
லேஸ் - ஏன்
அந்த்த - நீ
ஏற்ஜா பேத் - வீட்டுக்கு திரும்பி செல்
எர்ஜா - திரும்பி
பேத் - வீடு
எஸ்மக் - உன் பெயர் என்ன
எம்சீ - நட , செல்
அன gaan சியாதா - எனக்கு பசிக்கிறது

சனி, 18 ஜூலை, 2015

ரயில் Engine Details



ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?
ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?
WDP 3A
முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)


WDM 2
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.
YG
மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.