செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

வருமான வரி சோதனையை தவிர்க்க..!




வருமான வரி சோதனையை தவிர்க்க..!

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து 

லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை 

இருந்தால் வங்கியானது வருமான 

வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட 

தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க 

வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை 

பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் 

ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி 

செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் 

விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் 

துறையினருக்கு தெரிவிக்கப்படும்.

* ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு 

மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் 

அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் 

நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு 

போய்ச் சேரும்.

* பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் 

டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந்து லட்சம் 

ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் 

விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் 

ஒப்படைக்கப்படும்.

* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் 

பங்குகளில் அல்லது இ.டி.எஃப்.களில் முதலீடு 

செய்தால் அவர்களின் விவரம் வருமான 

வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ 

வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு 

துறை 

மூலமாக வருமான வரித் துறைக்கு 

தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் மேலே கண்ட முறையில் 

ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால் அதை 

குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் 

செய்துவிடுங்கள். இல்லை என்றால் வருமான 

வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க 

வேண்டி வரும்.

2 கருத்துகள்: